முகப்பருக்களை போக்குவதற்கான எளிய வழிகள் !
முகப்பருக்கள் என்பது பல காரணங்களால் தோன்றக்கூடியவை. இருப்பினும் இது அழகை கெடுக்கும் ஒரு விஷயமாகவே கருதப்படுகிறது. முகப்பருக்களை தோன்றி மாறியும் போது அதன் அடையாளங்களை அதாவது வடுக்களை விட்டு செல்கிறது. இந்த வடுக்கள் மறைவதற்கு நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்வதடுடன் முகபி பொலிவையும் வெகுவாக குறைத்து விடுகிறது. இந்த் மோசமான பருக்களை மிக எளிய முறையில் போக்கக்கூடிய வழிகள் குறித்து பார்க்கலாம்..
தேயிலை எண்ணெய் மற்றும் கற்றாழை ஜெல்:
தேயிலை மர எண்ணெயில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் எதிர்ப்புபி பண்புகள் உள்ளன, அவை பருக்கள் காரணமாக தோலில் ஏற்படும் அழற்சியை ஆற்ற உதவும்.
கற்றாழை ஜெல் கொப்புளங்களைக் குறைக்கும் மற்றும் புதிய தோல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் . தேயிலை மர எண்ணெய் மற்றும் கற்றாழை ஆகியவற்றின் கலவையானது பாக்டீரியாவை சமாளிக்க மிக சாதுர்யமாக செயல்படுகிறது.
முகத்தை கழுவிய பின்னர்,காட்டன் பந்தில் கலவையை நனைத்து இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை பருவுக்கு மேல் வைக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் முகப்பருக்களிலிருந்து விடுதலை பெற முடியும் பருக்களின் அறிகுறி தோன்றும் போது செய்வது நல்ல பலனை தரும்.