அள்ளு… கோடிகளை அள்ளு.. ஆப்பிள் நிறுவனம் செம லாபம்
நியூயார்க்:
அள்ளு… கோடிகளை அள்ளு என்று பங்கு சந்தையில் செம லாபம் ஈட்டியுள்ளது ஆப்பிள் நிறுவனம்.
முன்னணி தொழில்நுட்ப நிறுவனம் பங்கு சந்தையில் லட்சம் கோடி லாபத்தை ஈட்டி சாதனை படைத்துள்ளது.
நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் முக்கியமான தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், நியூயார்க் பங்குச்சந்தையில் ஜூன் காலாண்டில் 11.5 பில்லியன் டாலர் அளவிலான லாபத்தைப் பெற்றிருந்தது.
இது மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில், ஜூன் காலாண்டில் 30 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. அதேபோல் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாயும் 17 சதவீதம் உயர்ந்து 53.3 பில்லியன் டாலர் வரையில் சென்றது.
பங்குச்சந்தை தொடங்கியதும் ஆப்பிளின் சந்தை மதிப்பு எகிறிக்கொண்டே சென்றது. ஒரு கட்டத்தில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற உச்சத்தை ஆப்பிள் நிறுவனம் எட்டியது.
நன்றி- பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S