“இலங்கை அரசியல் குழப்பத்திற்கு ஒரு வாரத்தில் தீர்வு”
கொழும்பு:
ஒரு வாரத்திற்குள் இலங்கையில் அரசியல் குழப்பங்கள் தீரும் என்று அதிபர் சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை நீக்கி, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமித்து, அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன, சமீபத்தில் உத்தரவிட்டார்.
இதனால் இலங்கை அரசியலில் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது.
இந்நிலையில் ”இலங்கை அரசியலில் நிலவும் குழப்பமான சூழ்நிலை, ஒரு வாரத்திற்குள் முடிவுக்கு வரும்,” என்று அதிபர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நன்றி– பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S