எச்சரிக்கையாக இருங்க… சண்முகநதி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
திண்டுக்கல்:
எச்சரிக்கையாக இருங்க… எச்சரிக்கையாக இருங்க என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சண்முகநதி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 65 அடி நீர்மட்டம் கொண்டம் பாலாறு பொருந்தலாறு அணையில் தற்போது 60 அடியை தாண்டி வேகமாக நிரம்பி வருவதால் சண்முகநதி ஆற்றில் எந்நேரமும் தண்ணீர் திறந்து விடப்படலாம்.
இந்நிலையில் பாலாறு பொருந்தலாறு, சண்முகநதி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
நன்றி– பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S