சீரமைப்பு பணிகள் தொடக்கம்… கொல்லம் ரயில் ரத்து
திருவனந்தபுரம்:
ரயில் பாதை சீரமைப்பு பணிகள் நடப்பதால் செப்டம்பர் 2 வரை குருவாயூர், கொல்லம் ரயில் ரத்து செய்யப்படுகிறது.
கேரளாவில் வெள்ளம் பாதிப்பால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது ரயில்பாதை உட்பட பல சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
இதில் திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் ரயில்பாதை சீரமைப்பு பணிகள் நடக்க உள்ளதால் குருவாயூர், கொல்லம் பயணிகள் ரயில் செப்டம்பர் 2 வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நன்றி– பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S