பவானி சாகரில் இருந்து உபரி நீர் திறப்பு… மக்களுக்கு எச்சரிக்கை
ஈரோடு:
பவானி சாகர் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட உள்ளதால் ஆற்றுக்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100.5 அடியை எட்டியுள்ளது. அணைக்கு தற்போது விநாடிக்கு 10,000 கனஅடி நீர்வரத்து உள்ளது.
இதனால் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரிநீர் முழுவதும் திறந்து விட இருப்பதால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
நன்றி– பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S