“மக்களின் உத்தரவு… காங்கிரசுக்கு ஆதரவாக உள்ளது”
ஜெய்ப்பூர்:
மக்களின் உத்தரவு காங்கிரசுக்கு ஆதரவாக உள்ளது என்று காங்., மூத்த தலைவர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜஸ்தான் முதல்வர் வேட்பாளராக கருதப்படும் அசோக் கெலாட் கூறியதாவது:
எண்ணிக்கை அதிகரிக்கலாம், குறையலாம். ஆனால், மக்களின் உத்தரவு காங்கிரசுக்கு ஆதரவாக உள்ளது. எங்களுக்கு மெஜாரிட்டி கிடைத்துள்ளது. பா.ஜ.,வை தவிர மற்ற கட்சிகள், சுயேட்சைகள் விரும்பினால், எங்களுக்கு ஆதரவு அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி– பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S