முதல்வரின் நிவாரண நிதி யாருக்கு சென்றது? விபரம் இல்லையாம்
ஐதராபாத்:
யாருக்கு சென்றது முதல்வரின் நிதி… என்று கேள்விகள் எழுந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தெலுங்கானா முதல்வர், சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அரசால், 2014 ஜூன் முதல், 2015 ஆகஸ்ட் வரை, 12 ஆயிரத்து, 462 காசோலைகள் மூலம், 86.6 கோடி ரூபாய், முதல்வர் நிவாரண நிதியில் இருந்து அளிக்கப்பட்டது.
ஆனால் அதில், 1.69 கோடி ரூபாய்க்கான, 182 காசோலைகளுக்கான பயனாளிகள் விபரம் மட்டுமே அரசிடம் உள்ளது. மற்றவைக்கான கோப்புகள் ஏதும் அரசிடம் இல்லை என, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.
இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நன்றி– பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S