21ம் நாளாக கும்பக்கரையில் குளிக்க தடை
தேனி:
21ம் நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 21 வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக அருவிக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
நன்றி– பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S