இலங்கை அரசியல் குழப்பத்திற்கு தீர்வு?

இன்று மாலை இந்தச் சந்திப்புகள் அதிபர் செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மாலை 6 மணியளவில் பேச்சு நடத்தவுள்ளார்.
அதையடுத்து, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான- ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், றிசாத் பதியுதீன் உள்ளிட்டோருடன், மாலை 7 மணிக்கு பேச்சு நடத்தவுள்ளார்.
தற்போதைய அரசியல் நெருக்கடிகளைத் தீர்க்கும் புதிய முயற்சிகளில், இந்தச் சந்திப்புகள் முக்கியமான திருப்பமாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S