குடிநீரின் விலையை அதிகரிப்பது தொடர்பிலான அதிவிஷேட வர்த்தமானி
போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரின் விலையை அதிகரிப்பது தொடர்பிலான அதிவிஷேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய 350 – 499 மில்லி லீற்றர் நீர் போத்தல்கள் 26 ரூபாவாகவும், 500 – 749 மில்லி லீற்றர் நீர் போத்தல்கள் 35 ரூபாவாகவும் 1 – 1.49 லீற்றர் நீர் போத்தல்கள் 50 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S