நிறுத்தி வைக்கப்பட்ட தொடருந்தின், 3 ரயில் பெட்டிகளில் தீ
கொழும்பு – தெமட்டகொட ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட தொடருந்தின், 3 ரயில் பெட்டிகளில் சற்றுமுன்னர் தீ பரவியுள்ளது.
இதனால் குறித்த பகுதியில் பற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு தீயணைப்பு பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக மூன்று தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்துள்ளன.
பழுது பார்க்கும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கொழும்பு தீயணைப்பு பிரிவினரின் 3 வாகனங்கள் பயணியில் ஈடுபட்டுள்ளன.
எனினும் தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறிப்படவில்லை.
இந்த அனர்த்தம் காரணமாக ரயில் நிலையத்தில் நின்ற பயணிகள் பெரும் பதற்றம் அடைந்துள்ளதாக தெரிய வருகிறது.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S