படைப்புழு தாக்கம்….விவசாயிகளுக்கு நட்டஈடு
படைப்புழு தாக்கத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கும் நடவடிக்கை இன்று (10) ஆரம்பமாகவுள்ளது.
இதன் முதல்கட்ட வேலைத்திட்டம் அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் முழுமையாக பாதிக்கப்பட்ட 307 விவசாயிகளுக்கு இதன்போது நட்டஈடு வழங்கப்படவுள்ளது.
இதன்படி, பாதிப்புக்குள்ளான ஒரு ஏக்கருக்கு 40,000 ரூபா வீதம் நட்டஈடு வழங்கப்படவுள்ளது.
இதனைத் தொடர்ந்து, எதிர்காலத்தில் அனுராதபுரம், மொனராகலை மாவட்டங்களிலுள்ள படைப்புழுவினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் பி.ஹரிசன் நியூஸ்பெஸ்டுக்கு தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நட்டஈடு வழங்குவதற்காக அமைச்சரவையினால் 250 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S