இலங்கையை சேர்ந்த லூசன் புஷ்பராஜ் உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்
உலக ஆணழகன் மற்றும் உடலமைப்பு விளையாட்டு போட்டியில் இலங்கையை சேர்ந்த லூசன் புஷ்பராஜ் உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
மேலும் இதுகுறித்து தெரிவிக்கையில், தாய்லாந்தில் நடைபெற்று வரும் 10 ஆவது உலக ஆணழகன் மற்றும் உடலமைப்பு விளையாட்டு போட்டியில் பல நாடுகளை சேர்ந்த ஆணழக வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில், பல பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் இறுதியில் இலங்கையை சேர்ந்த ஆணழக வீரர் லூசன் புஷ்பராஜ் 100 கிலோ கிராம் எடை பிரிவில் உலக சாம்பியன் பட்டத்தை தட்டிசென்றார்.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S