இலங்கை வந்துள்ள இங்கிலாந்து அணி வீரருக்கு கொரோனா தொற்று உறுதி.!!
இலங்கையுடனான டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வருகை தந்த இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் வீரர் மொயீன் அலி கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியினருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இவ்வாறு மொயீன் அலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் அவர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S