அதிகரிக்கும்… ஜிசாட் – 7ஏ’ ஆயுட்காலம் அதிகரிக்கும்
சென்னை:
அதிகரிக்கும்… அதிகரிக்கும்… ஆயுட்காலம் அதிகரிக்கும் என்று இந்திய விண்வெளி ஆய்வு மைய தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
”புதிய தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளதால், ‘ஜிசாட் – 7ஏ’ செயற்கைக்கோளின் ஆயுட்காலம், ஆறு மாதங்கள் அதிகரிக்கும்,” என, இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர், சிவன் கூறினார்.
தற்போது ஏவப்பட்ட, ‘ஜி.எஸ்.எல்.வி., – எப்11’ ராக்கெட்டில், இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட நிலைகளில், புதிய நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால், செயற்கைக்கோளின் வாழ்நாள், ஆறு மாதங்கள் அதிகரிக்கும் என்றார்.
மேலும் அடுத்த ஆண்டு, பல செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன என்றும் தெரிவித்தார்.
நன்றி– பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S